உறுமும் புலியை
முறம்கொண்டு விரட்டும்
வீரத்தாயவள் அற்புதம் அம்மாள்..
இரு பத்து வருடங்கள்
இடையறாப் போராட்டம்
இழக்கமாட்டோம் இனியும்
எங்கள் பேரறிவாளனை...
பேராயக்கட்சியினரே
பேயாட்டமிடும் சோனியாவே
பல்லாக்குத்தூக்கும் சிதம்பரம் வகையறாவே...
ஓயமாட்டோம் இனி
ஒருவரையும் இழக்காமல்
காப்பதே எங்கள் பணி...
பொய்வழக்குகளைப்
புறந்தள்ளுவோம்
புதுப்படைகளை நாங்கள்
உருவாக்குவோம்...
வீரத்தாயவள் அற்புதம் அம்மாள்..
No comments:
Post a Comment